திருவண்ணாமலை மாவட்டத்தில் காலியாக உள்ள நர்ஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,
தேசிய நலவாழ்வு குழும திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி
ஸ்டாப் நர்ஸ் (Staff Nurse). காலியாக உள்ள பணியிடங்கள்-5, மாத சம்பளம்-ரூ.18ஆயிரம்
தகுதி
இந்திய நர்சிங்கால் அங்கீகரிக்கப்பட்ட அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் நர்சிங் கல்லூரிகளில் GNM/B.Sc (நர்சிங்) டிப்ளமோ.
பணி
பல்நோக்கு மருத்துவமனை பணியாளர், காலியாக உள்ள பணியிடங்கள்-2, மாத சம்பளம்-ரூ.8ஆயிரத்து 500
தகுதி
8-ஆம் வகுப்பு தேர்ச்சி
விண்ணப்பத்துடன் அனுப்ப வேண்டிய ஆவணங்கள்:
1. கல்வித் தகுதி சான்று.
2. மதிப்பெண் சான்று.
நிபந்தனைகள்:
1. இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது.
2. எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:-
செயல்பாட்டு செயலாளர்/மாவட்ட சுகாதார அலுவலர்,
மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society),
மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம்,
பழைய அரசு மருத்துவனை வளாகம், செங்கம் சாலை,
திருவண்ணாமலை.
21.02.2025 அன்று மாலை 5.00 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பங்கள் மேற்கண்ட முகவரிக்கு வரவேற்கப்படுகின்றன. அதற்கு மேல் வரப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது.
இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.