திருவண்ணாமலை மாவட்ட சிறப்பு திட்ட செயலாக்க அலகில் இளம் நெறிஞர் (Young Professional) பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் தர்ப்பகராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அவர்களின் அலுவலகத்தில் திட்ட செயலாக்க அலகிற்காக மாவட்ட அளவில் பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்து விரிவான ஆய்வு மற்றும் தரமான தரவுகளை ஆய்வு செய்தல், ஆய்வுகளின் அடிப்படையில் விளக்க காட்சிகள்,கொள்கை விளக்கங்களை உருவாக்குதல் ஆகிய நோக்கங்களை நிறைவேற்றும் விதமாக இளம் நெறிஞர் பதவிக்கு பணியாற்றிட விண்ணப்பிக்கலாம்.
கணினி அறிவியல் (அ) தகவல் தொழிநுட்பத்தில் இளங்கலை பொறியியல் (அ) தரவு அறிவியல் (Data Science) (அ) புள்ளிஇயல் படிப்பில் இளங்கலை பட்டம் (அ) மேலே குறிப்பிட்ட பாடப்பிரிவில் தொடர்புடைய படிப்பில் முதுகலை பட்டம் படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு இளம் நெறிஞர் (Young Professional) நியமனம் நடைபெறும்.
மேற்படி தகுதியுள்ள இளம் நெறிஞருக்கு மாதாந்திர தொகுப்பூதியம் ரூ.50000/-(ரூபாய் ஐம்பதாயிரம் மட்டும்) வழங்கப்படும். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் 07.02.2025 முதல் 17.02.2025 மாலை 5.45 மணிக்குள் தங்கள் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்படிவத்தினை புள்ளியியல் துணை இயக்குநர், மாவட்ட புள்ளியியல் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம், வேங்கிக்கால், திருவண்ணாமலை-606604. என்ற முகவரிக்கு நேரிலோ /தபால் மூலமாகவோ அனுப்பலாம்.
இதன் தொடர்பான விண்ணப்ப படிவம் மற்றும் அரசாணை விவரங்களை திருவண்ணாமலை மாவட்ட இணையதள முகவரி https://tiruvannamalai.nic.in மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
இவ்வாறு கலெக்டர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.
-----------------------------------