திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா போட்டி-பரிசு ரூ.5 ஆயிரம்

திருவண்ணாமலை லைபரரியில் நடக்கும் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா போட்டியில் முதல் பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படுகிறது. 

திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா போட்டி-பரிசு ரூ.5 ஆயிரம்

இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, 

அய்யன் திருவள்ளுவரின் 133 அடி உயர இருவுருவச் சிலை கடந்த 2000ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதியால் கன்னியாகுமரியில் நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இதனை வெள்ளி விழாவாக கொண்டாட நவம்பர் 12ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்ட மைய நூலகத்தில் டிசம்பர் 23 ஆம் தேதி முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை திருவள்ளுவர் புகைப்படம் காட்சிப்படுத்தப்பட்டு, திருக்குறளின் பெருமைகளை உணர்த்தும் நிகழ்ச்சிகள் நடத்துதல் திருவள்ளுவர் புகைப்படத்திற்கு மாலை அணிவித்தல், திருக்குறள் விளக்க உரைகளையும். திருக்குறள் தொடர்பான புகைப்படங்களையும் பொது மக்கள் பார்வைக்கு வைத்து புகைப்பட கண்காட்சி நடத்தப்படவுள்ளது.

திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா போட்டி-பரிசு ரூ.5 ஆயிரம்

மேலும் டிசம்பர் 23ஆம் தேதி முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை, திருவண்ணாமலை மாவட்ட மைய நூலக வாசகர் வட்டம் சார்பில் மாணவர்கள் மற்றும் நூலக வாசகர்களைக் கொண்டு திருக்குறள் கருத்தரங்கம் வினாடி வினா போட்டி, பேச்சுப் போட்டி மற்றும் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டிகள் நடத்தப்படுகிறது. 

இதில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக தலா ரூ. 5000 இராண்டாம் பரிசாக ரூ. 3000 மற்றும் மூன்றாம் பரிசாக ரூ. 2000 ரொக்கப் பரிசாக வழங்கப்படும். மேலும் போட்டிகளில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்படும். 

திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா போட்டி-பரிசு ரூ.5 ஆயிரம்

போட்டிகளில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள். திருவண்ணாமலை மாவட்ட மைய நூலகத்தை டிசம்பர் 21ஆம் தேதிக்குள் அணுகி போட்டிகளில் பங்கேற்கலாம்.

இவ்வாறு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

------------------------------------