பெண் போலீஸ் கணவர் தூக்கிட்டு தற்கொலை

பெண் போலீஸ் கணவர் தூக்கிட்டு தற்கொலை

காரணம் என்ன?

திருவண்ணாமலை அருகே பெண் போலீஸ் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

பெண் போலீஸ் கணவர் தூக்கிட்டு தற்கொலை

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, 

திருவண்ணாமலை அடுத்த வேட்டவலம் அருகே உள்ள பாப்பன்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் ராமலிங்கம் (வயது 38). விவசாயி. 

ராமலிங்கத்தின் மனைவி கீதா. திருவண்ணாமலை ஸ்டேஷனில் போலீசாக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு கடந்த 2011ம் ஆண்டு திருமணம் நடந்தது. விஷ்ணுபிரியன் என்ற 4 வயது மகனும், சம்யுக்தா என்ற 10 மாத பெண் குழந்தையும் உள்ளனர். 

இந்நிலையில் நேற்று இரவு ராமலிங்கம், தனது வீட்டில் இருந்த பேன் மாட்டும் கொக்கியில் புடவையை மாட்டி அதில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

பெண் போலீஸ் கணவர் தூக்கிட்டு தற்கொலை
ராமலிங்கம்

இது குறித்து ராமலிங்கத்தின் தந்தை ஏழுமலை, வேட்டவலம் போலீசில் புகார் செய்தார். புகாரில் அவர் கணவன்-மனைவிக்கு இடையே சமீப காலமாக அடிக்கடி குடும்ப பிரச்சனை ஏற்பட்டு வந்ததாகவும், அதன் காரணமாக தனது மகன் ராமலிங்கம் குடிபழக்கத்திற்கு அடிமையானதாகவும், இதனால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார். 

இதையடுத்து போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இது குறித்து வேட்டவலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாறன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Post Previous Post

No comments