திருவண்ணாமலையில் மளிகை கடைகாரர்கள் 5 பேர் கைது

திருவண்ணாமலையில் மளிகை கடைகாரர்கள் 5 பேர் கைது 

திருவண்ணாமலையில் குட்கா போன்ற போதை பொருட்களை வைத்திருந்த மளிகை கடைகாரர்கள் 5 பேரை போலீசார் கைது செய்தனர். 

திருவண்ணாமலையில் மளிகை கடைகாரர்கள் 5 பேர் கைது

திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி., கே.பிரபாகருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி திருவண்ணாமலை டி.எஸ்.பி., ரவிச்சந்திரன் மேற்பார்வையில் திருவண்ணாமலை டவுன் இன்ஸ்பெக்டர் ஏ.ராஜா தலைமையிலான தனிப்படையினர் திருவண்ணாமலை நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். 

அப்போது திருவண்ணாமலை சிவன்படத் தெருவை சேர்ந்த பரஸ்ராம் (வயது 38), அவரது மகன் நர்பத் (21), அய்யங்குள தெருவை சேர்ந்த நாதூராம் (63) அவரது மகன் சதிஷ்குமார் (34), பே கோபுரம் தெருவை சேர்ந்த துரைசாமி (39) ஆகியோர்களுக்கு சொந்தமான மளிகை கடைகளில் குட்கா போன்ற போதைப் பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

இது சம்மந்தமாக டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.65 ஆயிரம் மதிப்புள்ள சுமார் 57 கிலோ கிராம் எடையுள்ள குட்கா போன்ற போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டது.

இத்தகவலை திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது. 

Next Post Previous Post

No comments