அரசு பஸ் மோதி மின்சார வாரிய அதிகாரி பலி

அரசு பஸ் மோதி மின்சார வாரிய அதிகாரி பலி

திருவண்ணாமலை அருகே அரசு பஸ் மோதியதில் மின்சார வாரிய அதிகாரி பரிதாபமாக இறந்தார். 

அரசு பஸ் மோதி மின்சார வாரிய அதிகாரி பலி

இது பற்றிய விவரம் வருமாறு, 

திருவண்ணாமலை அடுத்த மங்கலம் அருகே உள்ள வேடந்தவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் குமார்(வயது 47). மனைவி பெயர் ஜோதி(36). இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். குமார் மங்கலம் துணை மின் நிலையத்தில் சி.ஐ-யாக (கமர்ஷியல் இன்ஸ்பெக்டராக) பணி புரிந்து வந்தார். 

குமார், இன்று மாலை, வேடந்தவாடி கிராமத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த அரசு பஸ் அந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கியெறிப்பட்ட குமார், பலத்த காயமடைந்து அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் இறந்தார். 

குமாரின் உடலை பார்த்து அவரது குடும்பத்தினரும், உறவினர்களும் கதறி அழுதது காண்போரை கண் கலங்க வைத்தது. போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இச்சம்பவம் குறித்து மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் டிரைவரான கீழ் குன்னுமுறிஞ்சி கிராமத்தைச் சேர்ந்த பாலாஜி என்பவரை தேடி வருகின்றனர். 

Next Post Previous Post

No comments