டேட்டா ஆபரேட்டர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்-கலெக்டர்

டேட்டா ஆபரேட்டர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்-கலெக்டர் 

விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு 

திருவண்ணாமலை மாவட்டத்தில் சுகாதார அலுவலகத்தில் காலியாக உள்ள டேட்டா ஆபரேட்டர் பணி நிரப்பப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 


திருவண்ணாமலை தேசிய நலவாழ்வு குழுமம், மாவட்ட நல வாழ்வு சங்கத்தின் சார்பில் 2 டேட்டா ஆபரேட்டர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. தேசிய நலவாழ்வு குழும திட்டத்தின் கீழ் காலியாக உள்ள 2 டேட்டா ஆபரேட்டர் பணியிடங்களுக்கு (வட்டார தரவு உள்ளிட்டாளர்) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 

தகுதி

கணினி பட்டதாரியாக இருக்க வேண்டும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் கணினி பாடத்தில் டிப்ளோமா முடித்திருக்க வேண்டும். 

சம்பளம்

மாதம் ரூ.13 ஆயிரத்து 500 

தேவையான ஆவணங்கள்

1)கல்வித் தகுதி சான்று

2)மதிப்பெண் சான்று 

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி

கவுரவ செயலாளர்/துணை இயக்குநர், 

சுகாதார பணிகள்,

மாவட்ட நல்வாழ்வு சங்கம்(District Health Society),

துணை சுகாதார பணிகள் அலுவலகம்,

பழைய அரசு மருத்துவமனை வளாகம், செங்கம் சாலை, 

திருவண்ணாமலை.

நிபந்தனைகள்

1)இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது.

2)எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டாது

வருகிற 22-06-2024 மாலை 4 மணிக்குள் நேரிலோ, தபாலிலோ விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் எனவும், அதற்கு மேல் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

--------------------------------

டேட்டா ஆபரேட்டர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்-கலெக்டர்

Next Post Previous Post

No comments