லாரியில் விழுந்த சுகாதார ஆய்வாளர் பலி

லாரியில் விழுந்த சுகாதார ஆய்வாளர் பலி 

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது பரிதாபம் 

உடல்நிலை சரியில்லாமல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுகாதார ஆய்வாளர் ஓடும் லாரியில் விழுந்ததில் பரிதாபமாக இறந்தார்.  

லாரியில் விழுந்த சுகாதார ஆய்வாளர் பலி

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தாலுகா கொல்லங்கோடு கிராமத்தைச் சேர்ந்தவர் ரகுவரன் நாயர் (வயது 47). இவருக்கும், திருவண்ணாமலை அடுத்த கீரனூரைச் சேர்ந்த சென்னம்மாள்(35). இவர்களுக்கு 8 வயதில் ஒரு மகனும், பிறந்து 45 நாட்களே ஆன பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. 

ரகுவரன் நாயர். திருவண்ணாமலை அடுத்த சாத்தனூர் அணையில் சுகாதார ஆய்வாளராக பணியாற்றி வந்தார். மனைவி சென்னம்மாள் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். 

ரகுவரன் நாயர் விரைவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக சொல்லப்படுகிறது. இதற்கு அவர் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு அவர் கடந்த 7ம் தேதி திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

இந்நிலையில் நேற்று(9ந் தேதி) அதிகாலை 3 மணியளவில் அவர் மருத்துவமனை முன்பு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். மருத்துவமனையிலிருந்து அவர் வெளியே வந்து அந்த வழியாக சென்ற லாரியின் பின் சக்கரத்தில் விழுந்து விட்டதாக சொல்லப்படுகிறது. 

தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த ரகுவரன் நாயரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். லாரியில் விழுந்து அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என விசாரணை நடத்தினர். 

மருத்துவ துறையில் பணியாற்றிய ஊழியர், நோய் கொடுமையில் சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனை முன்பு இறந்து கிடந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த சம்பவம் குறித்து திருவண்ணாமலை கிழக்கு போலீசார் விபத்து என (304 A) வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Post Previous Post

No comments