நாட்டு வெடிகுண்டு வீசி வாலிபரை கொல்ல முயற்சி

நாட்டு வெடிகுண்டு வீசி வாலிபரை கொல்ல முயற்சி

திருவண்ணாமலையில் பரபரப்பு

நாட்டு வெடிகுண்டு வீசி வாலிபரை கொல்ல முயற்சி

திருவண்ணாமலை அருகே முன்விரோதம் காரணமாக வாலிபர் மீது நாட்டு வெடிகுண்டு வீசி கொல்ல முயற்சி நடந்தது. இதில் அந்த வாலிபர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். 

இது பற்றிய விவரம் வருமாறு, 

திருவண்ணாமலை அருகே உள்ள நல்லவன்பாளையத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 23). சாரம் கட்டும் வேலை செய்து வருகிறார். இவரது நண்பர் அருள்குமார். செட்டிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர். 

மணிகண்டனின் மோட்டார் சைக்கிளை, அருள்குமார் எடுத்துச் சென்று ரிப்பேர் செய்து விட்டதாக சொல்லப்படுகிறது. இது சம்மந்தமாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பிறகு ஊர் பிரமுகர்களிடம் மணிகண்டன் முறையிட்டு  வண்டியில் உள்ள பழுதை சரிசெய்து அருள்குமாரிடமிருந்து மோட்டார் சைக்கிளை வாங்கி வந்ததாக கூறப்படுகிறது. 

இதனால் இருவருக்குமிடையே விரோதம் இருந்து வந்தது. இன்று மாலை மணிகண்டனை, அருள்குமார் மது அருந்த அழைத்ததாக சொல்லப்படுகிறது. இதன்பேரில் நல்லவன்பாளையம்-செட்டிப்பட்டு கூட்டு ரோடுக்கு மணிகண்டன் சென்றார். 

அப்போது அருள்குமார் தலைமையில் 2 மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் திடீரென நாட்டு வெடிகுண்டை எடுத்து மணிகண்டன் மீது வீசினர். இதில் ஒரு குண்டு, தரையில் விழுந்தும், இன்னொரு வெடிகுண்டு மணிகண்டனின் மோட்டார் சைக்கிள் மீது விழுந்தும் வெடித்தது. இதில் மணிகண்டனுக்கு இடுப்பு பகுதியில் படுகாயம் ஏற்பட்டது. மேலும் மோட்டார் சைக்கிளில் பின்புற பகுதி சேதம் அடைந்தது. 

இதையடுத்து படுகாயமடைந்த மணிகண்டன் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 

இது சம்மந்தமாக திருவண்ணாமலை மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து வெடிகுண்டு வீசி விட்டு தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர். மேலும் வெடித்தது எந்த வகை குண்டு? இது தப்பி ஓடியவர்களுக்கு கிடைத்தது எப்படி?வெடிகுண்டு வீசும் அளவிற்கு அவர்களுக்குள் என்ன விரோதம்? உண்மையான காரணம் என்ன? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

இச்சம்பவம் நல்லவன்பாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Post Previous Post

No comments