அதிவேக லாரி மோதி மின் ஊழியர் உள்பட 2 பேர் பலி

அதிவேக லாரி மோதி மின் ஊழியர் உள்பட 2 பேர் பலி

திருவண்ணாமலை அருகே அதி வேகமாக வந்த டிப்பர் லாரி மோதி மின்வாரிய ஊழியர் உள்பட 2 பேர் இறந்தனர். 

இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, 

திருவண்ணாமலை அடுத்த வெறையூர் அருகே உள்ள ஆனானந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் சீத்தாராமன்(வயது 65). விவசாயி. இவருக்கு 4 பிள்ளைகள். மூத்த மகன் ராஜேஷ்(32) குடியாத்தம் நரியபட்டு மின் வாரிய அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார். இன்னும் திருமணம் ஆகவில்லை. 

விடுமுறைக்கு ஊருக்கு வந்திருந்த ராஜேஷ், வேலைக்கு செல்வதற்காக பஸ் ஏறுவதற்கு இன்று காலை தனது நண்பர் கோபாலகிருஷ்ணனுடன்(35) மோட்டார் சைக்கிளில் தல்லாகுளம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வேகமாக வந்த டிப்பர் லாரி ஒன்று அந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற ராஜேஷ், பின்னால் உட்கார்ந்திருந்த கோபாலகிருஷ்ணன் ஆகியோர் தூக்கியெறிப்பட்டு படுகாயமடைந்து அதே இடத்தில் பரிதாபமாக இறந்தனர். 

அதிவேக லாரி மோதி மின் ஊழியர் உள்பட 2 பேர் பலி

இறந்த கோபாலகிருஷ்ணனும் ஆனானந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர். தந்தை பெயர் சர்க்கரை. சர்க்கரைக்கு 3 மகன்கள். மூத்த மகனான கோபாலகிருஷ்ணனுக்கு இன்னும் திருமணமாகவில்லை. விபத்து நடந்ததும் டிப்பர் லாரி டிரைவர் லாரியிலிருந்து குதித்து தப்பி ஓடிவிட்டார். 

இந்த விபத்து குறித்து வெறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை தேடி வருகின்றனர். 

ஒரே கிராமத்தைச் சேர்ந்த நண்பர்கள் விபத்தில் பலியான சம்பவம் ஆனானந்தலில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 

Next Post Previous Post

No comments