பிரபல பள்ளி ஊழியர் விபத்தில் பலி

பிரபல பள்ளி ஊழியர் விபத்தில் பலி 

பைக், கார் மீது மோதிய லாரியால் பரபரப்பு

திருவண்ணாமலையில் 2 பைக், கார் மீது லாரி மோதியதில் பிரபல பள்ளியின் ஊழியர் பலியானார். பெண் உள்பட 2 பேர் படுகாயமடைந்தனர். 

பிரபல பள்ளி ஊழியர் விபத்தில் பலி

இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, 

திருவண்ணாமலை அவலூர்பேட்டை சாலையில் உள்ள எஸ்.ஆர்.ஜி.டி.எஸ் பள்ளியில் (கனகாம்பாள் பள்ளி) போக்குவரத்து பிரிவு மேலாளராக பணிபுரிந்து வந்தவர் மோகன்ராஜ் (வயது 36).

நேற்று இவர் பள்ளியின் வேலையாக தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளில் வேலூரில் இருந்து திருக்கோயிலூர் செல்லும் ரிங் ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.

மோகன்ராஜ்

அப்போது பின்னால் வந்த டிப்பர் லாரி மோகன்ராஜ் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. பிறகு இன்னொரு மோட்டார் சைக்கிளிலும், காரிலும் மோதி நின்றது.

இதில் மோகன் ராஜ் அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் பிணமானார். இன்னொரு மோட்டார் சைக்கிளில் வந்த பவன்குமார் (37) ,காரில் சென்று கொண்டிருந்த சென்னை தேனாம்பேட்டை சேர்ந்த அமிர்தா (32) ஆகியோருக்கும் படுகாயம் ஏற்பட்டது. இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

பிரபல பள்ளி ஊழியர் விபத்தில் பலி

ஒரே நேரத்தில் 3 வாகனங்களில் மீது லாரி மோதியதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சென்று போக்குவரத்தை சரி செய்தனர். மோகன்ராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இச்சம்பவம் குறித்து எஸ்.ஆர்.ஜி.டி.எஸ் பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் இறந்து போன மோகன்ராஜின் அண்ணன் திருவண்ணாமலை கல்நகரைச் சேர்ந்த உதய முருகன் கிழக்கு போலீசில் புகார் செய்தார்.

அதன் பேரில் இன்ஸ்பெக்டர் குணசேகரன், சப்-இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரை தேடி வருகின்றனர். 

Next Post Previous Post

No comments