தீப விழா அன்னதானத்திற்கு இன்று 6ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

தீப விழா அன்னதானத்திற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

கார்த்திகை தீபத்திருவிழாவில் அன்னதானம் வழங்க விரும்புவோர் இன்று 6ந் தேதி முதல் வரும் 15ந் தேதிக்குள் விண்ணப்பித்து அனுமதி பெறலாம் என மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார். 

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, 

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத்திருவிழா வரும் 14ந்தேதி முதல் தொடங்குகிறது. 17ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும் 10 நாள் விழாவில் 26ந் தேதி பரணிதீபம் மற்றும் மகாதீப திருவிழா நடைபெறவுள்ளது.

வெளிமாவட்டம், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து திருவிழாவை காண சுமார் 50 லட்சம் பக்தர்கள் கலந்துகொள்ளவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது தீபத்திருவிழாவின் போது அன்னதானம் வழங்க உத்தேசிக்கும் தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் இணையதளத்தின் வாயிலாக பதிவு செய்து மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனுமதிக்கபட்ட இடங்களில் மட்டுமே அன்னதானம் வழங்க வேண்டும். 

அன்னதானம் வழங்க விரும்புவோர் திருவண்ணாமலை செங்கம் சாலை, பழைய அரசு மருத்துவமனையில் இயங்கும் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் அலுவலகத்தில் இன்று 6ந்தேதி முதல் 15ந்தேதி வரை பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை அளித்து அனுமதி பெற வேண்டும். மேலும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், முகவரி தெரிவிக்கும் ஏதேனும் அங்கிகரிக்கப்பட்ட சான்று நகல் ஆகிய விவரங்களை அளிக்க வேண்டும்.

கலெக்டர் முருகேஷ்

அன்னதானம் வழங்கவோர்கள் தங்கள் சார்ந்தவர்களின் விவரத்தினை ஆதார் அட்டை நகலுடன் சமர்பிக்க வேண்டும். எக்காரணத்தை கொண்டும் வரும் 15ந் தேதிக்கு பின்னர் விண்ணப்பம் பெறப்பட மாட்டாது. அன்னதானம் அளிப்பவர்கள் அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே அன்னதானம் மட்டுமே அளிக்க வேண்டும். அனுமதி அளிக்கப்பட்ட நாள், நேரத்தில் மட்டுமே அன்னதானம் வழங்கப்பட வேண்டும். அனுமதி பெறாமல் அன்னதானம் வழங்க கூடாது. 

பக்கதர்களுக்கு இடையூறு இல்லாமல் கிரிவலப்பாதையிலிருந்து 100 மீட்டர் உட்புறம் அன்னதானம் வழங்க வேண்டும். நோய் தொற்று உள்ளவர்களை அன்னதானம் சமைக்கவோ மற்றும் வழங்கவோ அனுமதிக்க கூடாது. வாழை இலையில் மட்டுமே அன்னதானம் வழங்கவேண்டும் உணவு பொருட்கள் தரமானதாகவும், தூய்மைதானதாகவும் மற்றும் கலப்படம் இல்லாமலும் இருக்க வேண்டும்.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் தட்டுகளில் அன்னதானம் வழங்ககூடாது பிளாஸ்டிக் டம்பளர்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்ய கூடாது. குப்பை தொட்டிகளை வைத்து அன்னதானம் அளிப்பவர்களே உணவு கழிவுகளை சேகரித்து அகற்ற வேண்டும். அன்னதானம் வழங்குமிடத்தை சுத்தம் செய்து விட்டு செல்ல வேண்டும்.

போதிய வழிக்காட்டு முறைகளை பின்பற்றாதவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் விவரங்களுக்கு 044-237416, 9047749266, 9865689838 தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். 

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார். 

-                                                        ------------------------------------


Next Post Previous Post

No comments