திருவண்ணாமலை டாஸ்மாக் அருகே 2வது கொலை சம்பவம்

திருவண்ணாமலை டாஸ்மாக் அருகே 2வது கொலை சம்பவம்

பீர்பாட்டில், கத்தியால் குத்தி வாலிபர் கொலை

திருவண்ணாமலை அருகே டாஸ்மாக்கில் மது வாங்கி குடித்த போது ஏற்பட்ட தகராறில் வாலிபர் ஒருவர் பீர்பாட்டில், கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். 

திருவண்ணாமலை வ.உ.சி நகரைச் சேர்ந்தவர் சரவணன்(வயது 32) ஜே.சி.பி டிரைவர்.இவரது தம்பி சரத் தனது நண்பர்களுடன்  திருவண்ணாமலை-செங்கம் செல்லும் சாலையில் உள்ள ஒட்டகுடிசல் என்ற இடத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கி அருகில் உள்ள நிலத்தில் அமர்ந்து குடித்துள்ளார்.  

அப்போது அவர்கள் அருகே சிலர் உட்கார்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது 2 தரப்பினரிடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில் எதிர்தரப்பினர், சரவணனின் தம்பியை வாட்டர் கேனால் தாக்கியதாக சொல்லப்படுகிறது. இது குறித்து சரவணனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சரவணன், அங்கு சென்று தகராறு செய்த வாலிபர்களை தட்டி கேட்டாராம். 

அப்போது ஏற்பட்ட தகராறில் சரவணனையும், அவருடன் இருந்த சதீஷ், சரத் ஆகியோரை 3 பேர் சேர்ந்து பீர்பாட்டிலாலும், கத்தியாலும் குத்தியதாக சொல்லப்படுகிறது. சரவணன் ரத்தவெள்ளத்தில் மயங்கி விழுந்ததும் அவர்கள் பைக்கில் தப்பி சென்று விட்டனர். உடனடியாக சரவணன் மற்றும் சரத், சதீஷ் ஆகியோர் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

திருவண்ணாமலை டாஸ்மாக் அருகே 2வது கொலை சம்பவம்
சரவணன்

அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியிலேயே சரவணன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மற்ற 2பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் திருவண்ணாமலை மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தினர். 

விசாரணையில் சரவணனை கொலை செய்தது ஆடையூரைச் சேர்ந்த தேவநேசன்,வாசுதேவன், கோசாலையைச் சேர்ந்த பிரதாப் ஆகியோர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் 3 பேரை கைது செய்தனர். 

ஒட்டகுடிசல் அருகே உள்ள மற்றொரு டாஸ்மாக்கில் கடந்த செப்டம்பர் மாதம் வ.ஊ.சி நகரைச் சேர்ந்த விஜய் என்பவர் மது வாங்கி குடித்த போது பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Next Post Previous Post

No comments