தொழில், கல்வி, தனிநபர் கடன் பெற சிறப்பு முகாம்


12ந் தேதி செய்யாரிலும், 19ந் தேதி திருவண்ணாமலையிலும், 26ந் தேதி ஆரணியிலும் தனிநபர் கடன், சுய உதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கு  கடன், கல்வி கடன் ஆகியவை பெற சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, 

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (டாம்கோ) மூலம் ஒவ்வொரு ஆண்டும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின மக்களுக்கு கடன் திட்டங்களான தனிநபர் கடன், சுய உதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கு  கடன், கல்வி கடன் திட்டம்; ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. 

மேற்குறிப்பிட்ட கடன் திட்டங்களுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கீழ்க்கண்ட இடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. 

தொழில், கல்வி, தனிநபர் கடன் பெற சிறப்பு முகாம்

                 

1) 12.10.2023 காலை 10.30 முதல்  மாலை 05.00 மணி வரை- வட்டாட்சியர் அலுவலகம், செய்யார்.

2) 19.10.2023 காலை 10.30 முதல்  மாலை 05.00 மணி வரை- வட்டாட்சியர் அலுவலகம், திருவண்ணாமலை.

3) 26.10.2023 காலை 10.30 முதல்  மாலை 05.00 மணி வரை- வட்டாட்சியர் அலுவலகம், ஆரணி 

மேற்கண்ட நாட்களில் சம்பந்தப்பட்ட தாலுக்காவிற்குட்பட்ட மற்றும் அருகில் உள்ள தாலுக்காவில் உள்ளவர்கள் கடன் மனுக்களுடன் சார்ந்துள்ள மதத்திற்கான சான்று (சாதிச்சான்று), ஆதார் அட்டை, வருமானச் சான்று, உணவுப் பங்கீடு அட்டை,  இருப்பிடச்சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம் / திட்ட அறிக்கை, ஓட்டுநர் உரிமம் (போக்குவரத்து வாகனங்கள் கடன் பெறுவதற்காக இருந்தால் மட்டும்) மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.  

கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கும் போது பள்ளி மாற்றுச் சான்றிதழ், மாணவர் என்பதற்கான உறுதிச்சான்றிதழ் (Bonafide certificate) கல்விகக ட்டணங்கள் செலுத்திய இரசீது செலான் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் ஒளிப்பட நகல்களையும் சமர்ப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

எனவே,  திருவண்ணாமலை மாவட்டத்தில் வசிக்கும் முஸ்லீம், கிறித்துவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகிய சமூகத்தினர்கள் கடன் விண்ணப்பங்களை பெற்று அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களின் நகல்களுடன் சமர்ப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.  

Next Post Previous Post

No comments