பழங்குடியினர் பள்ளியில் கலெக்டர் முருகேஷ் ஆய்வு

பழங்குடியினர் பள்ளியில் கலெக்டர் முருகேஷ் ஆய்வு
fzpj ghlk; elj;jpdhu;


திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ், ஜவ்வாதுமலை அரசவெளி அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட பள்ளியினை ஆய்வு செய்தார். அப்போது பணிக்கு வராத ஆசிரியர்களை சஸ்பெண்டு செய்யவும் உத்தரவிட்டார். 

அந்த பள்ளியில் ஒவ்வொரு வகுப்பாக சென்று மாணவர்களின் கற்கும் திறனை ஆய்வு செய்தார். குறிப்பாக 6 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கணிதம் கற்பித்துடன் கேள்விகள் மூலம் மாணவர்களின் கற்றல் திறன்களைஆய்வு செய்தார். அனைத்து மாணவர்களிடம் அரசால் அளிக்கப்படும் பாடப் புத்தகங்கள், சிருடைகள், பைகள், காலணிகள் ஆகியன அனைவருக்கும் அளிக்கப்பட்டதா? என்பதை கேட்டு உறுதி செய்தார். 

மாணவர்களின் உடல் நிலை குறித்து ஆய்வு செய்ய சிறப்பு மருத்துவ குழு ஏற்பாடு செய்யப்பட்டு அனைத்து மாணவர்களின் உடல் நிலை பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து வரும் நாட்களிலும் அவ்வப்போது காய்ச்சல் சிறப்பு முகாம்கள்  நடத்தவும் மருத்துவ துறைக்கு அறிவுறுத்தினார். 

மாணவர்களுக்கு அளிக்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு செய்தார். சமையல் செய்யும் இடம் மிகவும் சுத்தமாக பராமரிக்க வேண்டும் எனவும் கலெக்டர் முருகேஷ் அறிவுறுத்தினார். 

பழங்குடியினர் பள்ளியில் கலெக்டர் முருகேஷ் ஆய்வு

மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டித்தர மதிப்பீடு தயார் செய்து உடன் பணிகள் துவங்க பொதுப்பணித் துறைக்கு அறிவுறுத்தினார்.

பள்ளி ஆசிரியர்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்து, அனைத்து மாணவ மாணவியர்களுக்கும் முறையாக கல்விகற்றுத் தருவதுடன் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வினையும் அவர்களுக்கு ஏற்படுத்தவும், பள்ளிவளாகம் முழுவதையும் சுத்தமாக பராமரிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

ஆய்வின் போது தொடர்ந்து பள்ளிக்கு வருகை தராத ஆசிரியரை தற்காலிக பணிநீக்கம் செய்யவும், பள்ளி தொடர்பான ஆவணங்களை பராமரிக்காத தலைமை ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை தொடரவும் ஆணையிட்டார். 

பழங்குடியினர் பள்ளியில் கலெக்டர் முருகேஷ் ஆய்வு

அரசவெளி உள்ளிட்ட 10 அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட பள்ளிகளுக்கு 15 எண்ணிக்கையில் சானிட்டரி நாப்கின் எரியூட்டிகள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களையும் அளித்தார்.

இந்த ஆய்வின் போது, ஆரணி வருவாய் கோட்டாட்சியர் ம.தனலட்சமி, மாவட்ட பழங்குடியினர் நலத்திட்ட அலுவலர் செந்தில் குமார் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

                                            -------------------------------------------




Next Post Previous Post

No comments