ஆயுத பூஜை- 25ந் தேதி வரை சிறப்பு பஸ்கள்


ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி விடுமுறை முன்னிட்டு சென்னையிலிருந்து வர 22ந் தேதி வரையும், மீண்டும் ஊர் திரும்ப 25ந் தேதி வரையிலும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. 

இது குறித்து விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழக பொது மேலாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, 

23.10.2023 திங்கட்கிழமை அன்று ஆயுத பூஜை, 24.10.2023 செவ்வாய் கிழமை அன்று விஜயதசமி ஆகிய பண்டிகைகளை முன்னிட்டு 21.10.2023 முதல்  25.10.2023 வரை தொடர் விடுமுறை என்பதால் பொது மக்கள் வசதிக்காக தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை மற்றும் போளுருக்கு சிறப்பு பேருந்துகள் வரும் 20.10.2023 முதல் 22.10.2023 வரை தினசரி 95 பேருந்துகளும், பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து ஆரணி மற்றும் செய்யாறுக்கு 15 பேருந்துகளும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் திருவண்ணாமலை மண்டலம் மூலம் இயக்கப்படவுள்ளது.      

மேலும் பண்டிகை முடிந்து ஊர் திரும்ப  திருவண்ணாமலையிலிருந்து 75 பேருந்துகளும் போளுரிலிருந்து 20 பேருந்துகளும் ஆரணியிலிருந்து 10 பேருந்துகளும் செய்யாறிலிருந்து 5 பேருந்துகளும்  24.10.2023 முதல் 25.10.2023 வரை தினசரி சென்னைக்கு இயக்கப்படவுள்ளது 

இவ்வாறு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.

Next Post Previous Post

No comments