உரியடித்த பெண்கள்-ஆண்களுக்கு அனுமதியில்லை

பெண்கள் மட்டுமே பங்கேற்ற உரியடி திருவிழா திருவண்ணாமலையில் நடைபெற்றது. காளையர்கள் விளையாட்டாக கருதப்படும் உரியை தங்களாலும் அடிக்க முடியும் என பெண்கள் நிரூபித்துக் காட்டினர். கண்ணை கட்டிக் கொண்டு கையிலுள்ள கொம்பை கொண்டு அந்தரத்தில் தொங்கும் உரியை அடித்து பரிசுகளை வென்றனர். சில பெண்கள் திசை மாறி சுவற்றில் மோதியதும், கொம்பால் சுவற்றை அடித்ததும் பார்வையாளர்களை சுவாரசியப்படுத்தியது. திருவண்ணாமலை புதுத் தெருவில் விநாயகர் சதுர்த்தி விழா கலைநிகழ்ச்சிகளில் தான் இந்த பெண்களே பங்கேற்ற உரியடி நிகழ்ச்சி நடைபெற்றது.

வீடியோ: https://youtube.com/shorts/52usB5_hehU?si=9futoFdJwqOgy94j

------------------------------------------------




Next Post Previous Post

No comments