ப.உ.சண்முகம், இரா.தர்மலிங்கம் நூற்றாண்டு விழா

ப.உ.சண்முகம், இரா.தர்மலிங்கம் நூற்றாண்டு விழா

திருவண்ணாமலை மாவட்ட தி.மு.க சார்பில் மறைந்த முன்னாள் அமைச்சர் ப.உ.சண்முகம், மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.தர்மலிங்கம் ஆகியோர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உ
ள்ளது. 


இதுகுறித்து பொதுப்பணித்துறை அமைச்சரும், கழக உயர்நிலைசெயல் திட்டக்குழு உறுப்பினருமான எ.வ.வேலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, 

ப.உ.சண்முகம், இரா.தர்மலிங்கம் நூற்றாண்டு விழா

ப.உ.சண்முகம்

பேரறிஞர் அண்ணாவின் தம்பிகளாககவும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் உற்ற தோழர்களாகவும் விளங்கிட்ட, திராவிட இயக்கம் வட மாவட்டங்களில் வளர்ந்திட உழைத்திட்ட மூத்த முன்னோடிகள், கழகத்தில் பல முக்கிய பொறுப்புகளை வகித்தவர்களுமான மறைந்த முன்னாள் அமைச்சர் ப.உ.சண்முகம் மற்றும் கழகத்தின் முதல் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.தர்மலிங்கம் ஆகியோரின் நூற்றாண்டு விழா, திருவண்ணாமலை மாவட்ட திமுகழகத்தின் சார்பில் சிறப்பாகவும், எழுச்சியாகவும் அக்டோபர் முதல் வாரத்தில் கொண்டாடப்படவுள்ளது.

நூற்றாண்டு விழாவில் மங்கல இசை, தமிழகத்தின் புகழ்பெற்ற கவிஞர்கள், சொற்பொழிவாளர்கள் பங்கேற்கும் கவியரங்கம், கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.

ப.உ.சண்முகம், இரா.தர்மலிங்கம் நூற்றாண்டு விழா
இரா.தர்மலிங்கம் 


விழா சிறப்பாக நடைபெற கழக பிரமுகர்கள், நகர பிரமுகர்கள் உள்ளிட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

நூற்றாண்டு விழாவில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், வர்த்தகர் சங்கம், பொது நல அமைப்புகள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்திட கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அறிக்கையில் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.  

                                 -------------------------------------------------------


சப்ஸ்கிரைப் செய்து புதிய வீடியோக்களை பெறுங்கள்.


Next Post Previous Post

No comments