மேலாண்மை பட்டய பயிற்சியில் சேர்ந்தால் வங்கியில் வேலை

மேலாண்மை பட்டய பயிற்சியில் சேர்ந்தால் வங்கியில் வேலை

கூட்டறவு சங்கங்கள் /கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்புக்கு தகுதியான கூட்டறவு மேலாண்மை பட்டய பயிற்சி 2023 - 2024 ஆம் ஆண்டு நேரடி சேர்க்கை நடைபெற்று வருகிறது. 

இது குறித்து திருவண்ணாமலை மண்டல இணைப்பதிவாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

திருவண்ணாமலை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் கூட்டுறவு சங்கங்கள் /கூட்டுறவு வங்கிகளில் வேலை வாய்ப்புக்கு முக்கிய கல்வித் தகுதியான கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி (Diploma in Co-operative Management) (முழுநேரம்) சேர்க்கை விண்ணப்பம் இணையவழி மூலம் விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு நேரடி சேர்க்கை வகுப்புக்கான 27.09.2023 முதல் 06.10.2023 வரை நடைபெறுகிறது. 

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் அனைத்து அசல் சான்றிதழ்களுடன் பயிற்சி பெறுவோர் மற்றும் பெற்றோர் /பாதுகாவலருடன் பயிற்சி நிலைய முதல்வரை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

இணையதள மூலம் நேரடி சேர்க்கை விண்ணப்பிக்க கடைசி நாள்- 06.10.2023 மாலை 5.00 மணி வரை

இவ்வாறு மண்டல இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார். 

Next Post Previous Post

No comments