லாரி புகுந்து வீடு தரைமட்டம்- 6 பேர் படுகாயம்

லாரி புகுந்து வீடு தரைமட்டம்- 6 பேர் படுகாயம்

சேத்துப்பட்டு அருகே வீட்டுக்குள் லாரி புகுந்தது. இதில் வீட்டின் முன்பகுதி தரைமட்டமானது. 6 பேர் படுகாயமடைந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த கடைசிகுளம் பகுதியில் இருந்து மரக்கட்டைகளை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று காப்பலூர் அட்டை பெட்டி தொழிற்சாலைக்கு சென்று கொண்டிருந்தது. 

நேற்று நள்ளிரவில் சேத்துப்பட்டு நம்பேடு கிராமத்தில் வந்த போது நிலை தடுமாறி ரோட்டின் ஓரம் இருந்த வீட்டுக்குள் நுழைந்தது. லாரி மோதியதில் வீட்டின் முன்பகுதி தரைமட்டமானது. 

இந்த விபத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பூ வியாபாரி கிருஷ்ணன். (வயது 65), அவரது மனைவி ஜெயலட்சுமி (60), மகன் ஏழுமலை (27). ஏழுமலையின் மனைவி சோனியா (22) ஆகிய 4 பேர் இடிபாடுகளில் சிக்கினர். லாரி மோதியதால் ஏற்பட்ட சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து இடிபாடுகளில் சிக்கியவர்கள் படுகாயங்களுடன் மீட்டனர்.

இவர்களும், படுகாயமடைந்த லாரி டிரைவர் மோகன், கிளீனர் ஏழுமலை ஆகியோரும் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். 

இந்த விபத்து குறித்து சேத்துப்பட்டு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

---------------------------------------------------------------

Next Post Previous Post

No comments