உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி

உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி

திருவண்ணாமலை, ஆரணி, செய்யாரில் உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி கலெக்டர் தலைமையில்
நடைபெற உள்ளது. 

நான் முதல்வன் 'உயர்வுக்கு படி' 12 ஆம் வகுப்பு முடித்து உயர்கல்வி தொடராத மாணவர்களுக்கு கல்லூரிகளில் சேருதல் சார்ந்து வழிகாட்டுதல் நிகழ்ச்சி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தலைமையில் மூன்று வருவாய் கோட்ட அளவில் நடைபெற உள்ளது,

திருவண்ணாமலை கோட்டத்தில் 27.6.2023 அன்று திருவண்ணாமலை டேனிஷ் மிஷன் மேல் நிலைப் பள்ளி வளாகத்திலும், செய்யார் கோட்டத்தில் 4.7.2023 அன்று செய்யார் அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளி வளாகத்திலும், ஆரணி கோட்டத்தில் 8.7.2023 அன்று ஆரணி சுப்பிரமணியர் சாஸ்திரியார் நிதி உதவி மேல் நிலைப் பள்ளி வளாகத்திலும் நடைபெற உள்ளது.

இம்முகாமில் உயர்கல்வி தொடராத மாணவர்களுக்கு கல்லூரிகளில் சேர்வதற்கான வழிகாட்டல், சாதிச் சான்று, வருமான சான்று மற்றும் இருப்பிடச் சான்று ஆகிய மூவகைச் சான்று வழங்குதல், வங்கிக்கடன் பெற, திறன் பயிற்சி மற்றும் பிற உதவிகள் சார்ந்த வழிகாட்டல்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

மேலும் இம்முகாமில் பெண் குழந்தைகளுக்கான திட்டங்கள். சமூக பாதுகாப்பு பிரச்சனைகளை தீர்த்தல், பெற்றோர்/மாணவர்களின் உயர்கல்வி விருப்பங்களுக்கான ஆலோசனைகளை வழங்குதல், மாநில மற்றும் மத்திய அரசால் வழங்கப்படும் இட ஒதுக்கீடு, இலவச விடுதி மற்றும் உதவித்தொகை விவரங்கள்,SC, ST மற்றும் OBC மாணவர்களுக்கான திட்டங்கள் குறித்து சார்ந்த அலுவலர்களை கொண்டு விளக்கம் அளிக்கப்படவுள்ளது.

இந்த முகாமை 12 ஆம் வகுப்பு முடித்து உயர்கல்வி தொடராத மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளும்படி மாவட்ட ஆட்சித் தலைவர் முருகேஷ் கேட்டுக் கொண்டுள்ளார். 

Next Post Previous Post

No comments