திருவண்ணாமலை: சாவிலும் இணை பிரியாத தம்பதி

திருவண்ணாமலை: சாவிலும் இணை பிரியாத தம்பதி

கணவன் இறந்த துக்கம் தாளாமல் மனைவியும் உயிரை விட்ட சம்பவம் மங்கலம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

திருவண்ணாமலை அடுத்த மங்கலம் கிராமத்தில் வசித்து வந்தவர் முனுசாமி, (வயது 98) இவரது மனைவி கருப்பம்மாள், (வயது 90). இவர்களுக்கு 2 மகள்களும், 1 மகனும் உள்ளனர். முனுசாமியும், கருப்பம்மாளும் வெளியிடங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு ஒன்றாகவே சென்று வந்தனர். 

இந்நிலையில் வயது முதிர்வின் காரணமாக கணவன்-மனைவி இருவரும் வீட்டிலேயே இருந்து வந்தனர். அவர்களை பிள்ளைகள் பராமரித்து வந்தனர். 

இந்நிலையில் நேற்று நள்ளிரவு 11 மணி அளவில் முனுசாமி உயிரிழந்தார். இதையடுத்து அவரது இறப்பு குறித்து உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது உடல் அடக்கம் இன்று நடைபெற இருந்தது. 

கணவனை இழந்த சோகத்திலும் மன வேதனையிலும் கருப்பம்மாள் இருந்து வந்தார். இன்று காலை 11 மணிக்கு துக்கம் தாங்காமல் கணவன் உடல் அருகே அழுது கொண்டிருந்த கருப்பம்மாள் கணவன் உடல் மீது மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் எழுப்ப முயன்றனர். ஆனால் அவர் எழுந்திருக்கவில்லை. கணவன் உடல் மீது அவர் உயிரை விட்டது தெரியவந்தது. 

திருவண்ணாமலை: சாவிலும் இணை பிரியாத தம்பதி

இதனால் அவர்களது பிள்ளைகளும், உறவினர்களும் அதிர்ச்சி அடைந்தனர். முனுசாமியை அடுத்து கருப்பம்மாளும் இறந்தது அவர்களுடைய துக்கத்தை அதிகரிக்க செய்தது. இதையடுத்து 2 பேரின் உடல்களும் அருகருகே பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. 

கணவன் இறந்த துக்கம் தாளாமல் மனைவியும் உயிரை விட்ட சம்பவம் மங்கலம் சுற்று பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Post Previous Post

No comments