நைலான் கயிற்றால் கழுத்தை இறுக்கி பெண் கொலை

நைலான் கயிற்றால் கழுத்தை இறுக்கி பெண் கொலை
ஜெயந்தி

குடும்பத் தகராறு காரணமாக மனைவியை நைலான் கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர். 

திருவண்ணாமலை அடுத்த கடலாடி முருகன் சாவடி தெருவைச் சேர்ந்தவர் முருகன் (வயது. 52) போளூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கிளார்க்காக உள்ளார். இவரது மனைவி ஜெயந்தி (50) இவர்களுக்கு 2 மகன், 1 மகள் உள்ளனர். 

முருகனுக்கு குடி பழக்கம் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. மேலும் மனைவியின் நடத்தையில் சந்தேகம் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதே போல் கணவனின் நடத்தையில் ஜெயந்திக்கும் சந்தேகம் ஏற்பட்டதாம். இதனால் அவர்களிடையே அடிக்கடி சண்டை நடந்து வந்தது. 


நைலான் கயிற்றால் கழுத்தை இறுக்கி பெண் கொலை

இந்நிலையில் சொந்த வீடு வாங்குவது தொடர்பாக கணவன்-மனைவிக்கிடையே நேற்று அதிகாலை தகராறு ஏற்பட்டதாம். அப்போது ஆத்திரத்தில் முருகன், சைக்கிளில் புத்தகத்தை கட்ட பயன்படுத்தப்படும் நைலான் கயிற்றை எடுத்து மனைவி ஜெயந்தியின் கழுத்தில் சுற்றி இறுக்கியதாக கூறப்படுகிறது. இதில் ஜெயந்தி அதே இடத்தில் துடிதுடித்து இறந்தார். 

தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 


நைலான் கயிற்றால் கழுத்தை இறுக்கி பெண் கொலை
முருகன்

இது சம்மந்தமாக கடலாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து திருவண்ணாமலையில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சரணடைந்த முருகனை கைது செய்தனர்.  

இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Post Previous Post

No comments