கூடுதலாக 31 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையம்

கூடுதலாக 31 இடங்களில் நேரடி கொள்முதல் நிலையம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 16.03.2023 முதல் கூடுதலாக 31 இடங்களில் நேரடி கொள்முதல் நிலையங்கள் செயல்பட துவங்கும் என கலெக்டர் அறிவித்துள்ளார். 

இது சம்மந்தமாக கலெக்டர் முருகேஷ், வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் கூறியிருப்பதாவது, 

திருவண்ணாமலை மாவட்டத்தில் 2022-23 காரீப் சம்பா பருவத்தில் இரண்டாம் கட்டமாக கூடுதலாக 9 வட்டங்களில் 31 மையங்கள் மூலம் நெல் கொள்முதல் 16.03.2023 அன்று முதல்  செய்யப்பட உள்ளது. இதற்கான இணையவழி முன்பதிவு 15.03.2023 முதல் துவங்கப்பட உள்ளது. 2022-23ம் ஆண்டிற்கு தமிழக அரசு சன்ன இரக நெல்லிற்கு குவிண்டால் ஒன்றிற்க்கு ரூ.100 உயர்த்தி ரூ.2160-ம் இதர இரகங்களுக்கு ரூ.75 உயர்த்தி ரூ.2115-ம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏற்கனவே செயல்பட்டு வரும் கொள்முதல் நிலையங்களுடன் பின்வரும் விவரப்படி கூடுதலாக 31 மையங்களில் மூலம் நெல் கொள்முதல் செய்யபட உள்ளது.

திருவண்ணாமலை வட்டத்தில் - நார்த்தாம்பூண்டி, கீழ்பென்னாத்தூர் வட்டத்தில் - காடகமான், தண்டராம்பட்டு வட்டத்தில் - மேல்கரிப்பூர், போளுர் வட்டத்தில் - எடப்பிறை, ஆரணி வட்டத்தில் - அரியாப்பாடி, வெம்பாக்கம் வட்டத்தில் - கீழ்நெல்லி, அரியூர், மாமண்டூர், தூசி, வெம்பாக்கம், வெங்களத்தூர், அழிவிடைதாங்கி, நாட்டேரி, தென்னம்பட்டு, பிரம்மதேசம், சுனைப்பட்டு, பெருங்காட்டூர், செய்யார் வட்டத்தில் - எச்சூர், வெங்கோடு, தவசி, ஆக்கூர், தேய்த்துறை, ஆலாத்தூர், பெருங்குளத்தூர், புளியரம்பாக்கம், மேல்சீசமங்கலம், மேல்மா, கடுகனூர், வந்தவாசி வட்டத்தில் - நல்லூர், பொன்னூர், சேத்பட்டு வட்டத்தில் - நம்பேடு ஆகிய இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது.

விவசாயிகள் பின்வரும் நடைமுறைகளை பின்பற்றி மேற்படி நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்  நெல் விற்பனை செய்து பயன் பெறலாம்.

15.03.2023 முதல் முன்பதிவு துவங்கும்.

விவசாயிகள் கிராம நிர்வாக அலுவலரிடம் அடங்கல் சான்றினையும், உதவி வேளாண்மை அலுவலரிடம் மகசூல் சான்றினை அடங்கலில் பெற வேண்டும்.

நெல் விற்பனை செய்ய விரும்பும் விவசாயிகள் நேரடி கொள்முதல் மையத்திற்கு மேற்குறிப்பிட்ட சான்றுகள், ஆதார், சிட்டா மற்றும்  வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றினை நேரில் கொண்டு சென்று இதற்கென நியமனம் செய்யப்பட்டுள்ள நேரடி கொள்முதல் மைய அலுவலரிடம் அளிக்க வேண்டும்.

கூடுதலாக 31 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையம்


நேரடி நெல் கொள்முதல் மைய அலுவலர் விவசாயிகள் அளிக்கும் ஆவணங்கள் அடிப்படையில் பதிவுகள் மேற்கொள்வார். பதிவுகள் மேற்கொண்ட பின்னர் சம்மந்தப்பட்ட விவசாயியின் பதிவு செய்த அலைபேசி எண்ணிற்கு 'வெற்றிகரமாக பதிவேற்றம் செய்யப்பட்டது' என்ற குறுஞ்செய்தி அனுப்பப்படும்.

பதிவு செய்த விண்ணப்பங்களின் விவரம் தொடர்புடைய கிராம நிர்வாக அலுவலரின் DASH BOARD-க்கு அனுப்பப்பட்டு அவரால், பதிவு செய்துள்ள விவரங்கள் முழுமையாக சரிபார்க்கப்பட்டு தகுதியின் அடிப்படையில் ஒப்புதல் அல்லது நிராகரிப்பு செய்யப்படும்.

ஒப்புதல் அளிக்கப்பட்ட விவசாயிகள் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தேதி மற்றும் நேரத்தில் மட்டுமே சம்மந்தப்பட்ட மையத்திற்கு சென்று நெல் அளிக்க வேண்டும்.

விவசாயிகள் முன்பதிவு செய்வதில் சந்தேகம், சான்றுகள் பெறுதல், நெல் கொள்முதல் செய்யும் போது தேவையற்ற கால தாமதம் அல்லது சிக்கல்கள் ஏதும் ஏற்பட்டால் உதவிக்கு 9487262555, 9445245932 (தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம்), 9443911434 (மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை)) ஆகிய எண்களை தொடர்பு கொண்டோ அல்லது Whatsapp வாயிலாக தெரிவித்தாலோ அவை உடனடியாக சரி செய்யப்படும்.

எனவே விவசாயிகள் மேற்குறிப்பிட்ட நடைமுறைகளை பின்பற்றி தங்களின் நெல்லை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வழங்கி பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

இவ்வாறு கலெக்டர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார். 

Next Post Previous Post

No comments