4ந் தேதி அண்ணாமலையார் கோயிலில் பங்குனி உத்திரம்

4ந் தேதி அண்ணாமலையார் கோயிலில் பங்குனி உத்திரம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 4ந் தேதி பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் தொடங்குகிறது. 

முருகப் பெருமானுக்கு உரிய சிறப்பு விரத தினமாக பங்குனி உத்தரம் கொண்டாடப்படுகிறது. சிவனுக்கும் பார்வதிக்கும் சோமசுந்தரர் என்றும் மீனாட்சி என்றும் நாமம் கொடுத்து மணம் செய்வித்த நாளும் பங்குனி உத்தர நாளாகும். சிவனின் மோன நிலையைக் கலைத்த மன்மதனை எரித்ததால் கலங்கி நின்ற தேவர்களுக்கு ஆறுதல் வார்த்தையாக சிவன் தேவியை இத்தினத்தில் மணந்தார் என்பது ஐதீகம்.

சுவாமிக்கு நடைபெறும் திருக்கல்யாணங்கள் உற்சவ மூர்த்திக்கு நடத்தப்படும் நிலையில் திருவண்ணாமலை தலத்தில் கோயில் கருவறையில் மூலவருக்கும், கல்யாண மண்டபத்தில் உற்சவருக்கும் திருமணங்கள் நடைபெறும். இப்படி இரு திருமண விழாக்கள் நடைபெறும் ஒரே சிவாலயம் திருவண்ணாமலை ஆகும். 


4ந் தேதி அண்ணாமலையார் கோயிலில் பங்குனி உத்திரம்



பங்குனி உத்திர தினத்தில் அதிகாலை அண்ணாமலையார் கோயில் நடை திறக்கப்பட்டு பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடைபெறும். பிறகு கருவறையில் அண்ணாமலையாருக்கும், போகசக்தி அம்மனுக்கும் திருக்கல்யாணம் நடைபெறும். இரவு அலங்கார மண்டபத்தில் உற்சவருக்கு திருக்கல்யாணம் நடைபெறும். 

அதன்பிறகு தங்க ரிஷப வாகனத்தில் சாமி திருவீதி உலா நடக்கிறது. 5ந் தேதி கீழ்நாத்தூரில் மண்டபகப்படியும், 6ந் தேதி அண்ணாமலையார் கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் நலங்கு உற்சவமும், 7ந் தேதியும், 8ந் தேதியும் ஊஞ்சல் உற்சவமும் நடக்கிறது. 

9ந் தேதி தாமரை குளத்தில் பாலிகை விடுதலும், குமரகோயில், காமாட்சியம்மன் கோயிலில் மண்டகப்படியும் நடைபெறுகிறது. 


முந்தைய செய்தியை படிக்க...

Next Post Previous Post

No comments