விவசாயிகளிடமிருந்து 3360 மெட்ரிக் டன் உளுந்து கொள்முதல்

விவசாயிகளிடமிருந்து 3360 மெட்ரிக் டன் உளுந்து கொள்முதல்

திருவண்ணாமலை, செய்யாறு, ஆரணி, கீழ்பென்னாத்தூர், வந்தவாசி, சேத்துப்பட்டு மற்றும் போளுர் ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் 1.3.2023 முதல் 29.5.2023 வரை ராபி 2022-23-ஆம் ஆண்டு பருவத்திற்கு உளுந்து கொள்முதல் செய்யப்படுகிறது. 

இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் கூறியிருப்பதாவது, 

மத்திய அரசின் ஆதார விலை திட்டத்தின் கீழ் 2022-2023-ஆம் ஆண்டிற்கு 01.03.2023 முதல் 29.05.2023 முடிய உள்ள ராபி பருவ காலத்தில் சாகுபடி செய்யப்பட்ட உளுந்து ஒரு கிலோ ரூ.66.00-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு 370 கிலோ மட்டுமே ஒரு விவசாயிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும். திருவண்ணாமலை மாவட்டத்திற்கு 3360 மெட்ரிக் டன் கொள்முதல் செய்திட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் கொள்முதல் செய்யப்படவுள்ள உளுந்து கீழ்க்காணும் அட்டவணையிலுள்ள தரத்தில் இருத்தல் வேண்டும்.

விவசாயிகளிடமிருந்து 3360 மெட்ரிக் டன் உளுந்து கொள்முதல்

இத்திட்டத்தில் திருவண்ணமலை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் உளுந்து விற்பனைக்கு எடுத்து வரும் பொழுது ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகத்தின் முன்பக்கம், சிட்டா, அடங்கல் ஆகியவற்றின் நகல்களுடன் வரவேண்டும். மேலும் திருவண்ணாமலை (9994392479), வந்தவாசி (9940377559), செய்யாறு(7904308982), ஆரணி(9600310391) கீழ்பென்னாத்தூர் (9600029874), சேத்துப்பட்டு (9043691234) மற்றும் போளுர் (9842280866) ஆகிய ஒழுங்கு முறை விற்பனைக் கூட அலுவலர்களை அணுகலாம்.

இவ்வாறு  மாவட்ட ஆட்சித்தலைவர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

Next Post Previous Post

No comments